Monday, November 7, 2011

5. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 1

பத்தாம் வகுப்பில் சொல்லிக்கொள்ளும்படி மதிப்பெண் வாங்கிவில்லை. இருப்பினும் என் அண்ணன் madurai jansi rani பூங்கா அருகில் உள்ள சைக்கிள் கடையில் 1990ல் ஒரு செவ்வாய் மாலை என்னை கூட்டி சென்று BSA SLR ("white walled tyre" உடன்) வாங்கித்தந்தார் (நீ வாங்கிய மார்க்குக்கு ஒரு டயர் மட்டும்தான் நியாயப்படி தரவேண்டும் என்று சொன்னதாக ஞாபகம்).  வீட்டினரின் ஏகோபித்த கவலைகளுக்கு நடுவில் வரண்டாவில் ஜம்மென்று வந்து நிறுத்தப்பட்டது சிகப்பு கலர் BSA SLR. சாப்பாடு, தூக்கம், இயற்கை அழைப்பு இந்த மூன்றைத்தவிர வேறு அனைத்தையும் சைக்கிள் பயன்படுத்தி எப்படி செய்யலாம் என்று யோசிக்க வைத்தது புது சைக்கிள் ஆர்வம்.
சைக்கிளும் பாட்டு கேட்கும் பழக்கமும் சேர்ந்து சில வினோதமான அனுபவங்களை நினைவில் இறக்கிய அந்த நாட்கள் சில...


"உதடுகளில் உனது பெயர் ஒட்டி கொண்டது அதை உச்சரிக்கும் பொது உள்ளம் தித்திக்கின்றது கனவுகளில் உன்னை கண்டு வெட்கம் வந்தது அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிச்சென்றது..." [வெட்கம் என்றொரு குணம் நம் சமூகத்தில் முன்பு இருந்தது என்பதை இப்பாடல் மூலம் அறிக!] என்னும் ஜெயச்சந்திரன் பாடல் என்னை சில மாதங்களாக படுத்திக் கொண்டிருந்தது. முதலிலோ, நடுவிலோ, கடைசியிலோ என்று பிட் பிட்டாக கேட்க முடிந்ததே தவிர முழு பாட்டும் கேட்கும் வாய்ப்போ என்ன படம் என்று கண்டுபிடிக்கும் வாய்ப்போ நழுவிக்கொண்டே இருந்தது. ஒரு முறை மேல மாசி வீதி வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்படி பெரியப்பா அனுப்ப, திரும்பி வரும் வழியில் ஆரிய பவன் முனையில்  இருக்கும் டீ கடையிலிருந்து உதட்டில் மீண்டும் பெயர் ஒட்டிக்கொண்டதாக ஜெயச்சந்திரன் அழைக்க முன் பக்கம் தொங்க விட்டிருந்த brown color பையுடன் சைக்கிளை நிறுத்தி "தங்க ரங்கன்" [எப்படித்தான் இப்படியெல்லாம் பெயர் வைத்தார்களோ!] என்று படப்பெயரை கண்டுபிடித்த திருப்தியுடன் வீட்டின் முன் வந்து சைக்கிளை நிறுத்தும் பொழுது வயிறு வாய்க்கு வந்து விட்டது - பை இல்லை. பிறகு நடந்தது தனிக்கதை. மதுரையின் பெரும்பாலான cassette கடைகளில் இப்படியொரு படமே கிடையாது என்று சொல்லி விட்டார்கள். Ceylone ரேடியோவில் தவறு நடக்காது என்ற நம்பிக்கையில் வருடக்கணக்கில் இந்த பாட்டை record செய்யும் முயற்சி தொடர்ந்தது. '79ல் வெளியான இந்த பாடலை '88 ல் முதலில் கேட்டு அதன் பின் சுமார் 15 வருடங்கள் துரத்தி சில வருடங்களுக்கு முன் சென்னை கோடம்பாக்கத்தில்  அலிகான் என்பவரின் "பழைய பாடல்கள் ஆவணக் காப்பகம்" தெரிந்து அதில் பதிவு செய்து ஒரு இரவில் நிதனாமாக கேட்ட போது பாட்டுடன் பதினைந்து வருடங்களும் பெருகி வழிய...இதே போல் "நெருப்பிலே பூத்த மலர்" படத்தின் "எங்கெங்கும் அவள் முகம்",  "பாலூட்டி வளர்த்த கிளி" படத்தின் "நான் பேச வந்தேன்", "கொக்கரக்கோ" படத்தின் "கீதம் சங்கீதம்" "ஆட்டோ ராஜா" படத்தின் "சங்கத்தில் பாடாத" என்று நீளும் கணக்கற்ற பாடல்களை என்னிடம் சேர்த்த BSA SLR க்கு நன்றி. இந்த படத்தின் பெயர்களை எல்லாம் கடைகளில் நெளிந்தபடி கேட்டு அலைந்ததும் cassette வந்த பின் கேட்கும் பொழுது கிடைக்கும் விளக்க இயலாத சந்தோஷமும் தனி.

"padmanabhan" enbhadhu "பேபி"யாகி மரியாதை நிமித்தம் "பேபியப்பா" என்றழைக்கப்பட்ட, எனக்கு கிரிக்கெட் அறிமுகம் செய்த Kapil Dev இன் தீவிர ரசிகரான என் மற்றொரு பெரியப்பா [இவர் டிவி இல்லாத அந்த காலத்தில் எந்த நாட்டில் match நடந்தாலும் ABC, BBC என்று அந்த நாட்டு stationஐ தன் radioவில் பிடித்து விடுவார்]   ஒரு அதிகாலை சர்க்கரை நோயிடம் முழுவதுமாக தோற்ற பொழுது குடும்ப வைத்தியரை அழைத்து வரும்படி என் அப்பா அனுப்ப மாலை முரசு office அருகே செயின் அறுந்து விட்டது. "K,A,D,A,L கடலா காதலா? கடல் shampoo தான் குளிச்சா நல்லாருக்கும்" என்று நாளுக்கு நூறு முறை ஒலிக்கும் அர்த்தமில்லா advertisement முடிந்து காலை 7.30 மணி திருச்சி வானொலியின் முதல் பாட்டாக "மெட்டி ஒலி காற்றோடு" எதிரில் உள்ள டீ கடையில் ஓடிக்கொண்டிருக்க அதில் வரும் "துருதூ துதுதூ.. என்னும் humming, அதை தொடர்ந்து வரும் violin இவற்றுக்கிடையில்  எவ்வளவு போராடியும் செயின் துருப்பிடித்து இருந்ததால் மாட்ட முடியாமல் கிட்டத்தட்ட அழுகை எட்டிப்பார்க்கையில் என் அப்பா  "எண்ணெய் போடுடா" என்று சொல்லி சொல்லி அலுத்து போனது ஞாபகம் வர  அக்கடையில் வடை போட்டுக் கொண்டிருந்த முதியவர் chain போட உதவி செய்து "தம்பி அடிக்கடி எண்ணெய் போடணும்" என்று சொல்லிவிட்டு போக doctor இல்லாமல் வெறுங்கையுடன் வீட்டில் நுழைந்த போது எத்தனையோ score கள் சொன்ன அந்த வெள்ளை நிற பாக்கெட் transistor யும் பெரியாப்பவையும் பார்ப்பது அன்றே கடைசி என்று புரிந்தது. அதன் பின் சைக்கிள் செயினுக்கு மட்டுமில்லை எந்த இயந்திரத்தின் பராமரிப்பையும் எளிதில் மறந்ததில்லை. 
இந்த "மெட்டி ஒலி" பாட்டின் ஆரம்பத்தில் ஏன் ரேடியோவில் வருவது போல் noise irukkiradhu? ["தோகை இளமையில்..." பாட்டில் "பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் போட வேண்டும் புதுத்தென்றலோ பூக்களில் வசிக்கும்" வரிகளில் வரும் noise போல]
குறிப்பு: அரிது - இனிது "மிதிவண்டியும் மீளா நினைவும்"பகுதிகளின்  முடிவில்.

2 comments:

  1. I had one white color champ cycle while i was in middle school with high cushion at back side till neck it had support wheel too! those good old days in streets without traffic gone forever..

    ReplyDelete